சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் `பாலன்’. இப்படத்தை நேற்று பார்த்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி இப்படம் பற்றி தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இப்படம் குறித்து சூர்யா எழுதியுள்ள பதிவில், “பாலன் திரைப்படத்தைப் பார்த்தேன்; அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manjummel Boys) படத்திற்குப் பிறகு, இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே, சிதம்பரம் மற்றும் அவரது குழுவினர் நமக்கு எதை வழங்க விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது.
மலையாளத் திரையுலகிலிருந்து வந்த மற்றொரு மிகச்சிறந்த படைப்பு இது. ஜித்து மாதவனின் தனித்துவமான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்குப் பெரிய மரியாதை; அதிலும் குறிப்பாக, பெரும்பாலும் அறிமுக நடிகர்களைக் (Farzana Palathingal, சிறுவர்கள் Adhiseshan KR மற்றும் Muhammed Zinan, அத்துடன் Abbas-ஆக அசத்திய டொவினோ) கொண்டு, கணிக்க முடியாத ஒரு கதையம்சம் கொண்ட படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியது பாராட்டுக்குரியது. இந்த அறிமுக நடிகர்களின் நடிப்பைப் பார்த்தபோது, எனது சொந்தத் திறமைகளையும் நான் இன்னும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகா குறிப்பிடுகையில், ” ‘பாலன் தி பாய்’ (Balan the Boy) – சிதம்பரம் மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ள ஒரு திரைப்படம். ஜித்து மாதவனின் திரைக்கதை சுவாரஸ்யமும் தொடர்ச்சியான ஆச்சரியங்களும் நிறைந்தது; இதில் பரிவு, மர்மம், அப்பாவித்தனம் மற்றும் குற்ற உணர்வு ஆகியவை மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டு, ஒரு சிறந்த படைப்பாக இது அமைந்துள்ளது.துணிச்சலான முதிய பெண்ணாக நடித்த ‘டாலி ஜூன்’ (Dolly June) பற்றியும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் – எவ்வளவு புதுமையான கதாபாத்திரம் மற்றும் துணிச்சலான நடிப்பு!










