Thursday, April 25, 2024
-- Advertisement--

மகளுக்காக பாடிய தாய்..!! போன் நம்பர் தாருங்கள்..!!! சினிமாவில் வாய்ப்பு கொடுக்க தயாரான சோனு சூட் …!!!

நடிகர்கள் பலர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் உதவி செய்வதில்லை, கோடிக்கணக்கில் சொத்து சம்பாதித்து வைத்திருந்தாலும், அதை தன் சொந்த செலவிற்காகவே பலர் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நடிகர்களே ஆதரவற்றவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அதுபோல உதவும் குணமுடையவர் தான் நடிகர் சோனு சூட். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துவரும் நடிகர் சோனு சூட் ஏழை எளிய மக்களுக்கு உதவி தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து, தமிழில் வெளியான கள்ளழகர் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் வரவே தமிழில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இவர் நடித்த அருந்ததி, சந்திரமுகி போன்ற படங்கள் மக்களிடையே நல்ல பிரபலம் அடைந்தது.

கொரோனா காலகட்டத்தில் இவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த கூலி தொழிலாளிகள் போன்றோருக்கு உதவி செய்ததால் மிகவும் பிரபலம் அடைந்தார். வில்லன் என்ற அடையாளம் மாறி உதவும் உள்ளம் கொண்ட நடிகர் சோனு சூட் என்ற பாராட்டு இவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட்டுக்கு சமூக ஊடகம் வாயிலாக பல உதவி வேண்டி கோரிக்கை வைத்தனர், அதனை தொடர்ந்து செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் தனது மகளுக்காக பெண் ஒருவர் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோவை முகேஷ் குமார் சின்கா என்பவர் அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.அந்தப் பாடல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததால் இது நெட்டிசன்ககளிடையே மிகவும் வைரல் ஆனது.

இந்த வீடியோவை நடிகர் பார்த்து அதில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு கமெண்ட் செய்துள்ளார் இந்தப் பெண்மணி போன் நம்பர் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள். இந்த பெண்மணி அட்டகாசமான குரல் கூடிய விரைவில் திரைப்படத்தில் பாடப்படும் என்று தெரிவித்துள்ளார். சோனு சூட்டின் இந்த உதவி செய்யும் குணம் அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles