விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். பள்ளிப் பருவத்திலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சிறுவயதிலிருந்தே மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வமுடைய இவர் பகல் நிலவு சீரியல் மூலம் மக்களிடையே பிரபலம் பெற்று வந்தார். அதன் பிறகும் இவர் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார்.பகல் நிலவு சீரியலில் நடித்த நடிகர் உடனே அவருக்கு கிசுகிசு ஏற்பட்டதை தொடர்ந்து இவர் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை ரசிகர்கள் உடனே வைரலாக்கி விடுவார்கள். அதுபோல சமீபத்தில் நீல நீல நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இவருடைய ரசிகன் ஒருவன் நீல வானில் ஒரு வெண்ணிற நிலவாய்.. வெண்ணிற தாளில் ஒரு நீல மழைத்துளியாய்.என்று கமென்ட் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.











