சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். விரைவில் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க உள்ள சமந்தா அக்ஷய் குமார் அவர்களுடன் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி நேற்று DISNEY + HOTSTARல் வெளியானது.
நிகழ்ச்சியில் ஏகப்பட்ட விஷயங்களை ஜாலியாக சமந்தாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார் அந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய கரண் . பல கேள்விகளை சமந்தாவிடம் முன்வைத்து வந்த கரண் சமந்தாவின் விவாகரத்து பற்றி கேட்கத் தொடங்கினார். அப்போது உங்களுடைய கணவர் நாக சைதன்யாவை நீங்கள் விவாகரத்து செய்த போது என்று அவர் கூறியபோது என்னுடைய முன்னாள் கணவர் என்று குறிப்பிடுங்கள் என்று சமந்தா கூறியிருந்தார் அதனைத் தொடர்ந்து கேள்வி கேட்ட கரண் உங்கள் முன்னாள் கணவர் நாகசைதன்யா அவர்களை விட்டு பிரிந்த உடன் உங்களுக்கு நிறைய TROLL வந்ததா என்று கேட்டதற்கு சமந்தா ஆமாம் நான் அதில் புகார் செய்ய முடியாது ஏனென்றால் நான் தான் அந்த பாதையை தேர்ந்தெடுத்து அதை வெளிப்படையாக இருக்க முடிவு செய்தேன். பிரிந்தபோது நான் அதைப்பற்றி வருத்தப்பட முடியாது ஏனென்றால் அவர்கள் என் வாழ்க்கையில் முதலீடு செய்தவர்கள். அந்த நேரத்தில் என்னிடம் பதில் இல்லை என்று கூறிய சமந்தா கூறினார்.
விவாகரத்து முடிவு பற்றி கேட்டதற்கு இது கடினமாக இருந்தது ஆனால் இப்போது நன்றாக இருக்கிறது. நான் வலிமையானவன். இப்போது சுமுகமான சூழ்நிலை இல்லை. அது எதிர்காலத்தில் இருக்கலாம் என்று சமந்தா கூறி இருந்தார்
தொடர்ந்து பல கேள்விகளை முன்வைத்து வந்த பேட்டியாளர் சமந்தாவிடம் நீங்களே பார்த்து வியந்த வதந்தி செய்திகள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்க சமந்தா தனக்கு ஜீவனாம்சமாக ₹250 கோடி கிடைத்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. எந்த நாளிலும் வருவமான வரி அதிகாரிகள் தட்டிக் கேட்கலாம் என்றும் எதிர்பார்ப்பதாகவும், தனக்கு எதுவுமே கிடைக்காமல் போனதை காட்டுவேன் என்று கூறியிருந்தார்.
250 கோடி ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பதை ஊடகங்கள் உணர்ந்தபோது வதந்திகள் ஆகவே கலைந்து விட்டன என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பின் நயன்தாராவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாராவும் நானும் ஒன்றாக நடித்து இருந்தோம். நயன்தாரா சவுத் இந்தியாவில் பிக் ஸ்டார். அந்தப் படத்தின் கடைசி நாள் இருவரும் கட்டி பிடித்து அழுது விட்டோம் அந்த அளவிற்கு நெருக்கமாக பழகி இருந்தோம் என்று தனது அனுபவத்தைக் கூறினார்.