நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஒரு நேரத்தில் ரோஜாவின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இருக்கிறார்கள் ஏன் சிலர் ரோஜா தான் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து நடிகர்களும் இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ரோஜாவிற்கு பெரிய மார்க்கெட் இருந்தது. ரோஜா ஆர்கே செல்வமணி என்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திருமணம் செய்துகொண்டார். தமிழ்நாட்டுக்கு மருமகளான ரோஜா ஆந்திராவில் அரசியலில் களமிறங்கி தனக்கென ஒரு பெரிய கூட்டத்தையே வைத்திருந்தார்.
தற்பொழுது ரோஜா ஆந்திராவில் ஆந்திரப் பிரதேச அரசின் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இன்று ஆந்திராவில் உள்ள பீமாவரம் வருகை தந்திருந்த பிரதமர் மோடி அவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகி அல்லூரி சீதா ராமா ராஜு சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதற்கு முன் ஆந்திர சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா அவர்கள் பிரதமருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார். பிரதமரும் சிரித்துக்கொண்டே செல்பிக்கு போஸ் கொடுத்தபோது திடீரென்ற பிரதமர் அந்த இடத்தை விட்டு கண்டுகொள்ளாமல் நகர மீண்டும் பிரதமரை நிற்கவைத்து செல்பி எடுத்துக்கொண்டார் ரோஜா ரோஜாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களும் உடன் இருந்தார்.
தற்பொழுது ரோஜா பிரதமருடன் செல்பி வீடியோ வைரல் ஆகி வருகிறது.