ரேகா நாயர் பிரபல சின்னத்திரை நடிகையின் நெருங்கிய தோழி சித்ராவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை போராடும் தோழிகளில் இவரும் ஒருவர்.
சித்ராவின் மரணத்திற்கு ஹேமந்த் மற்றும் காரணம் இல்லை அவருடன் சில நபர்கள் இருக்கிறார்கள் அதனை ஹேமந்த் தெரிவித்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேட்டி கொடுத்து வந்தார். ரேகா நாயர் சன் டிவியில் பைரவி வம்சம் போன்ற சீரியலில் நடித்துள்ளார் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கியமான காட்சி ஒன்றில் நடித்திருந்தார். ரேகா கதைப்படி அந்த காட்சியில் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் படி ரேகாவின் கதாபாத்திரம் அமைந்தது.
அது மட்டுமல்லாமல் குழந்தைக்கு பாலூட்டும் காட்சியும் இருந்தது அதனை மறுக்காமல் நடித்துக் கொடுத்த ரேகா நாயர் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து கொண்டு தான் நான் நடித்தேன் அந்த காட்சி எனக்கு காமமாக தெரியவில்லை நிறைய பேர் படத்தைப் பார்த்துவிட்டு கண்கணக்கி அழுது விட்டோம் பார்க்கவே கஷ்டமாக இருந்தது உங்க மேல மரியாதை கூடுது என்று பாராட்டினார்கள் நான் கலையை நேசிக்கிறேன் என்று சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் வழக்கம் போல நடிகர் நடிகைகளை பற்றி கிசுகிசு செய்திகள் YOUTUBE பக்கத்தில் கூறி வர ரேகா நாயரை பற்றியும் பேசியிருந்தார். இன்று காலை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதன் அவர்களை எதார்த்தமாக ரேகா பார்க்க எப்படி நடிகைகளை நீங்க அசிங்கமா பேசலாம் நான் நிர்வாணமா நடிச்சது உங்களுக்கு என்ன நான் என்ன உங்க பொண்ணா இல்ல பொண்டாட்டியா என்று சரமாரியான கேள்விகளை கேட்டார்.
பொது இடத்தில் சத்தமாக ரேகா பேச ஆரம்பித்த உடன் அந்த இடத்தை விட்டு நகர பயில்வான் முயற்சித்துள்ளார் ஆனால் ரேகா விடாமல் அவரை பின்தொடர்ந்து சில கொச்சையான கேள்விகளையும் பயில்வான் ரெங்கநாதனிடம் கேட்க டென்சனான பயில்வான் வா போலீஸிடம் செல்வோம் என்று அழைக்க ரேகா நாயர் அந்த இடத்தை விட்டு சென்று இருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த திருவான்மையூரில் காலையில் நடைபயிற்சி செய்தவர்கள் அனைவரும் பெரும் பதத்தற்றுடன் காணப்பட்டனர்.