பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சியை படமாக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்த பிறகே அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா விரைவில் முழு நலத்துடன் மீண்டு மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.










