சமீப காலமாக பல பிரச்சினைகள் உலக மக்களுக்கு ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினைகளை சமாளிக்க மக்கள் புதுப் புது வழிகளை தேடி வருகின்றனர். வறுமை அனைவரையும் வாட்டி வதைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இந்த ஊரடங்கு உலகம் முழுக்க உள்ள மக்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய கோடீஸ்வரர்கள் முதல் அடிமட்ட மக்கள் வரை அனைவரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்குமா என்பது கேள்விக்குறி தான் இருப்பினும் ,தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் பல பிரபலங்கள் தங்கள் தொழில்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸர் ஆன ரைனி கிரேஸ் ரேஸ் கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமான ஒன்றாக வைத்து இருந்தார். ஆனால் தற்போது ஊரடங்கினாள் வருமானம் வருவதற்காக அவர் ஆபாசமாக நட்சத்திரமாக மாறி விட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
இந்த துறையில் நுழைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் நான் நிறைய பானங்களை சம்பாதித்து விட்டேன் , இன்னும் கொஞ்ச நாட்களில் பணம் ஆறு இலக்கங்களை எட்டிவிடும், இந்த பணம் எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது .இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும் இந்தியர்கள் என் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களை அவர்கள் வைத்துள்ளார்கள் இதனால் அவர் சமூகவலைத்தளத்தில்’ இந்தியனாக நான் இருந்தால் உள்ளே வராதே உன்னை நான் வரவேற்கவில்லை” என்று அவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.