கதிரேசன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரண்டாவது வாரம் முதல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா வெற்றிக்குப் பிறகு பத்து வருட இடைவெளிக்கு பின் ருத்ரன் படத்தில் சரத்குமார் உடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெற்றியை சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்தில் படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ருத்ரன் படத்தின் வெற்றியை அங்குள்ள 300க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் ருத்ரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு பயனுள்ள முறையில் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக கூறினார்.