Tuesday, September 8, 2026
-- Advertisement--

நாடு முழுவதும் பரபரப்பு.. நீட் தேர்வு ரத்து,சிபிஐ அதிரடி விசாரணை!

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நடை​பெற்​றது. மொத்​தம் 22.80 லட்​சம் மாணவ, மாணவி​கள் இந்த தேர்வை எழு​தினர்.

இந்​தச் சூழலில் நீட் தேர்​வுக்கு முன்​பாக ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்​தான் போலீ​ஸார் இணைந்து நடத்​திய விசா​ரணை​யில் பல்​வேறு மாநிலங்​களில் வினாத்​தாள் கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்​யப்​படு​வ​தாக தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. இதுதொடர்​பாக என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவி​லான தேர்​வு​களை நேர்​மை​யாக​வும், நம்​பகத்​தன்​மை​யுட​னும் நடத்த என்​டிஏ உறுதி பூண்​டிருக்​கிறது.

நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களைக் கேட்​டுக் கொண்​டோம். ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கேரளா, உத்தராகண்ட் உள்​ளிட்ட பல மாநிலங்​களின் போலீ​ஸாரிடம் இருந்து ஆதா​ரங்​களைப் பெற்று முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​படும். தவறு செய்​தவர்​கள் நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள். இவ்வாறு சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles