தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் நானி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதைத்தவிர நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவியின் 30வது படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இவர்களில் கெமிஸ்ட்ரியை காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.