பிரியா பவானி சங்கர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்த சீரியல் ப்ரியாவிற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தது.
ப்ரியாவின் ஹோம்லியான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. ப்ரியா பவானி சங்கருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரே சீரியலில் கிடைத்தார்கள். அதன்பின் வெள்ளித்திரையில் அறிமுகமாக நினைத்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை கொடுத்ததால் அதனைத் தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எஸ் ஜே சூர்யா உடன் நடிக்க தயங்கிய நடிகைகள் மத்தியில் தைரியமாக மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரியா தற்பொழுது அசோக் செல்வன் உடன் ஹாஸ்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆண்கள் விடுதியில் ஒரு பெண் வந்து மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சுவாரசியமாக சொல்ல முயற்சிப்பதாக கூறிவருகிறார்கள் படக்குழுவினர்.
இதற்கிடையில் உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் ப்ரியா. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிக்கும் பிரியா கவர்ச்சி ஏரியாவிற்கு செல்லாமலேயே இருந்தார்.
பிரியா தற்பொழுது குட்டை உடையில் டீசர்ட் அணிந்து ஸ்டைலாக கூலர் மாட்டிக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் இத நம்பவே முடியலையே என்று ப்ரியாவை கலாய்த்து வருகின்றனர்.