பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகிகளில் இவரும் ஒருவர். முதலில் ஒரு தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்திருந்தார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரியா அந்த தொடர் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் முதல் படம் இயக்குனர் ரத்தினவேல் அவர்களின் மேயாதமான் என்ற படம்தான். படம் நன்றாக இருந்தாலும் தளபதி விஜயின் மெர்சல் உடன் ஒன்றாக ரிலீஸ் ஆனதால் அனைவரும் விஜய் படத்தை நோக்கி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. அதனை தொடர்ந்து சர்ச்சை இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் சேர்ந்து மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். எஸ் ஜே சூர்யா படம் அப்படி இப்படி இருக்கும் என்று ஒதுங்கிக் கொண்ட நடிகைகள் மத்தியில் பிரியா தைரியமாக ஒப்புக் கொண்டு நன்றாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் தற்பொழுது மறுபடியும் SJ சூர்யாவுடன் பொம்மை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் பிரியா.
இதுவரை கவர்ச்சி ஏரியாவுக்கு போகாத அம்மணி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக முகம் சுளிக்காத அளவிற்கு கவர்ச்சி காட்டியும் வருகிறார்.
சமீபத்தில் அருவியில் பிரியா ரசித்து குளியல் போட்டு அதனை புகைப்படமாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அருவியை பார்ப்பதா பிரியாவை பார்ப்பதா என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.