தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர் அதன் பின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவர் 54 நாட்களுக்குப் பின் தான் ஜாமீனில் வெளிவந்தார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஸ்டெர்லைட் பற்றி திருமுருகன் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி அவர்களை விடுவிக்க பலர் டிவிட்டரில் குரல் கொடுத்து வந்தனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் திருமுருகன் காந்தி அவர்களை ரிலீஸ் செய்யக்கோரி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
சமீபத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி ட்வீட் ஒன்றை போட்டார் பிரியா பவானி சங்கர். அதில் நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம் வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.
அப்பொழுது பிஜேபிக்கு ஆதரவான ஒருவர் பிரியா பவானி சங்கர் இடம் அடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தானே என்று கேட்டுள்ளார் அதற்கு பிரியா பவானி சங்கர் This cracked me up 😂 பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான்😂 இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.