Wednesday, April 17, 2024
-- Advertisement--

கொரானோ எச்சரிக்கை….! வீட்டில் தன்னையே தனிமை படுத்தி கொண்ட பிரபல நடிகர்…!

பாகுபலி என்ற ஒரு படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இவர் இதற்கு முன்பு நிறைய வெற்றி படங்கள் தந்து இருந்தாலும் இந்த படம் இவர் மார்க்கெட்டையே மிகவும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு மீண்டும் ஒரு மெகா பட்ஜட் படமான சகோ என்ற படத்தில் நடித்தார்.ஆனால் இந்த படம் இவர் நினைத்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. மீண்டும் சகோ படத்தை இயக்கிய அதே இயக்குனரோடு மீண்டும் ஒரு மெகா பட்ஜட் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகர் பிரபாஸ் கொரனோ குறித்து தந்து இணைய பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் “வெளிநாட்டு படப்பிடிப்பை பத்திரமாக முடித்து திரும்பியுள்ளோம், கோவிட்-19 தற்போது பரவுவதை கருத்தில் கொண்டு என்னை நானே தனிமை படுத்திக்கொண்டேன், நீங்களும் இது போன்ற நடவெடிக்கைகள் எடுத்து வருவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles