ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றவர் மட்டும் அல்ல தனது திரைப்பயணத்தை முதல் முதலாக தொடங்கியது தமிழில் தான். தமிழில் மணிரத்தினம் அவர்களின் இருவர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின் ஹிந்தி தமிழ் படங்களை தேர்தெடுத்து நடித்து வந்தார். தமிழில் மற்றும் ஹிந்தியில் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஐஸ்வர்யா ராய் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரஜினி. ஐஸ்வர்யா ராய்யை படையப்பா படத்திற்கு சிபாரிசு செய்தார் ஆனால் ஐஸ்வர்யாராய் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியமால் போனது. அதன் பின் சந்திரமுகி படத்திற்கு மீண்டும் சிபாரிசு செய்தார் ரஜினி ஆனால் ஐஸ்வர்யா அந்த நேரத்தில் படு பிஸியாக இருந்ததால் அந்த படத்திலும் நடிக்கவில்லை. எந்திரன் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாவை முயற்சி செய்து ஒரு வழியாக தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் ரஜினி.
தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திய குருநாதர் மணிரத்னம் அவர்கள் அழைத்து ஐஸ்வர்யா நடிக்க மறுத்ததே இல்லையாம் அந்த அளவிற்கு மணிரத்னம் மீது மரியாதை கொண்ட ஐஸ்வர்யா மணிரத்னம் இயக்கிய குரு, ராவணன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
தற்பொழுது மணிரத்தினத்தின் இயக்கத்தில் மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். பொன்னியின் செல்வன் ஷூட்டிங் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார் மணிரத்னம் அவர்களின் மனைவி சுசாசினி .
அதில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பழுவூர் ராணி மற்றும் இளவரசி என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் நடிக்க வாய்ப்பு இருக்குமோ என்று கூறி வருகின்றனர்.
நடந்தால் நன்றாக தான் இருக்கும்.