Saturday, August 15, 2026
-- Advertisement--

பெற்றோர்களே கவலை வேண்டாம்… பாராசிட்டமால் சிரப் சர்ச்சைக்கு தமிழ்நாடு அரசு பதில்!

குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் குறித்து தவறான புரிதலே இந்த வதந்திக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் சில கட்டங்களில் குறிப்பிட்ட மூலப்பொருட்களை கரைக்க அல்லது தயாரிப்பு செயல்முறைக்காக ஆல்கஹால் பயன்படுத்தப்படலாம். ஆனால், அதனால் இறுதியாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப்புகள் இந்திய மருந்து தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்குப் பிறகே சந்தைக்கு அனுப்பப்படுகின்றன என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பி பெற்றோர் குழப்பமடைய வேண்டாம் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தயக்கமின்றி பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல்நலன் தொடர்பான தகவல்களை பகிரும் முன் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles