Friday, March 29, 2024
-- Advertisement--

மதுரை பிரபல பன் பரோட்டா கடைக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்…!!! அதிர்ச்சியில் மக்கள்.

மதுரையில் சுகாதாரமற்ற உணவு தயாரித்ததாக கூறியது பிரபல பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தமங்கலம் ஆவன் சந்திப்பில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள பிரபலமான பன் பரோட்டா கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் பெட்டி கடைக்கான அனுமதியை பெற்ற நிலையில் சாலையை ஆக்கிரமித்து உணவகத்தை நடத்தி வந்ததாக நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடை வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் கிடைத்துள்ளது. அதனால் அதிகாரிகள் சென்று சோதனை செய்தபோது புகார் உறுதியானது. ஆகையால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles