Saturday, April 20, 2024
-- Advertisement--

உடல்நிலை சரி இல்லாத நிலையில் நேரலையில் வர இருக்கும் நித்யானந்தா..!!! நாயகன் மீண்டும் வரார் என்று பக்தர்கள் கொண்டாட்டம்.

நித்தியானந்தா இவருக்கு இன்றும் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் ஆசிரமத்திற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பக்தர்களும் இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக நித்தியானந்தா உடல்நிலை சரியில்லாமல் தவித்து வருகிறார். மருத்துவர்களுக்கே என்ன வியாதி என்று கண்டறிய முடியவில்லை. நித்தியானந்தா சமாதி நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

நித்யானந்தா சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது அவருடைய ஆசிரமங்கள் காத்து வாங்குகிறது பக்தர்கள் நித்யானந்தாவின் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர் என்ற செய்திகளும் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க சமீபத்தில் தனது மகளை நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீட்டு தரக் கோரி சில பெற்றோர்களும் கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தனர்.

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது இன்று வரை புரியாத புதிராக இருக்கும் போது கைலாஷா என்ற நாட்டை உருவாக்கி அதில் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் என்று முன்பெல்லாம் செய்திகள் வந்தது.

தற்போது கைலாஷா என்கின்ற நாடே உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள். பல மர்மங்கள் நித்யானந்தா பற்றி இருக்க உலக நன்மைக்காக சமாதி நிலையில் இருக்கிறேன் விரைவில் சத்சங்க உரையாற்றுவேன் என்று பதிவு ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.

தற்பொழுது இணையத்தில் நித்யானந்தாவின் புகைப்படத்தை போட்டு வருகின்ற 13ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு நித்தியானந்தா மீண்டும் வரார் நேரலையில் பக்தர்கள் பார்க்கலாம் என்று சில வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நித்தியானந்தாவின் புகைப்படங்களை போட்டு கமலஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற நாயகன் மீண்டும் வரார் என்ற பாடலை பின்னணியில் கோர்த்துள்ளார் அவரது பக்தர்கள்.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நித்தியானந்தா நேரலையில் வருகிறாரா அல்லது உண்மையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஏதாவது ஆகிவிட்டதா என்பது இனி தான் தெரிய வரும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles