Tuesday, April 23, 2024
-- Advertisement--

மேடம் ஹனிமூன் எங்க போறீங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்ட கேள்வி…!!! நயன்தாரா கொடுத்த ரியாக்சன்..!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு VIPS மட்டும் அழைத்திருந்தனர். ஏகப்பட்ட பாதுகாவலர்களுடன் பலத்த பாதுகாப்புடன் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் நடந்துமுடிந்தது. திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் தனது காதல் மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்த பின் வெளியில் திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர்.

கோவில் வளாகத்தில் நயன்தாரா செருப்பு அணிந்து இருந்ததால் கொந்தளித்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முன்வந்தனர் அதன்பின் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் எழுதி மன்னிப்பையும் கேட்டுக் கொண்டார்.

சென்னை திரும்பிய விக்கி நயன்தாரா இன்று பத்திரிக்கையாளர் அனைவருக்கும் பிரம்மாண்டமாக மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நடந்த பிரஸ்மீட்டில் நீங்க எல்லாரும் இங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

எங்களுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி உங்களுடைய ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை என்று விக்கி மற்றும் நயன்தாரா மாறி மாறி பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நான் முதல் முதல்ல இவங்கள சந்திச்சது உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாரும் சாப்டிங்களா சாப்பிட முடிஞ்சுதா டைம் இருந்திச்சானு தெரியல எல்லாருக்கும் ரொம்ப நன்றி உங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய ஆசீர்வாதம் என்றும் தேவை என்று விக்கி உருக்கமாக பேசினர்.

அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஹனிமூன் எங்கே போறீங்க என்று கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே சென்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles