Wednesday, April 24, 2024
-- Advertisement--

” பந்தி முடிவதற்குள் சாப்பிட்டு வாருங்கள்” ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை ஆட்டை போட்ட செய்த வாலிபர்..!! சினிமா பாணியில் நடந்த உண்மை சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வாலிபன் ஒருவன் பணத்தை திருடி சென்றுள்ளான். சம்பவம் பாண்டியராஜன் செந்தில் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில் வரும் கதை போலவே உள்ளது.

இந்தப் படத்தில் ஒரு திருமணத்திற்காக டிப்டாப்பாக ஒரு பாண்டியராஜன் செந்திலும் செல்வார்கள். மணமக்களின் உறவினரான விசுவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு மொய் பணம் முழுவதையும் ஆட்டையை போட்டு சென்றுவிடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் திருவள்ளூரில் நடைபெற்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை யில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்றிரவு ஊத்துக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் ஆந்திர மாநிலம் தடாவில் சேர்ந்த பிந்து திருமணம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நண்பர்கள் உறவினர்கள் போன்றோர் மணமக்களுக்கு மொய் பணத்தை அளித்துள்ளனர். மண மக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்துள்ளனர். இரவு மண மேடை அருகே வந்த ஒரு மர்ம நபர் நான் சாப்பிட்டு விட்டேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்று அக்கறையாக சொல்லி உள்ளார். பாசத்துடன் சாப்பிடச் சொன்ன இளைஞரை நம்பி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார், 1 லட்சம் ருபாய் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு இந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாக மறைந்து போய் விட்டான்.

அவன் போனது கூட தெரியாமல் அனைவரும் கல்யாண வரவேற்பு குஷியில் இருந்துள்ளனர். காலம் போன பிறகுதான் மொய் பணம் முழுவதும் திருடப்பட்டு விட்டது என்பது தெரிந்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியை பதிவு செய்த கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருமணவீட்டில் சுமார் ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles