ஒரு தொழிலதிபராக இருந்து தனது கடின உழைப்பால் முன்னேறி அதன் பிறகு சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் லெஜெண்ட் சரவணன் அருள்.
இந்தியாவிலேயே பெரிய மற்றும் அனைத்து பொருட்களும் இருக்கும் வகையில் மல்டி ஸ்டோர் கடையை கொண்டு வந்து மக்களை விரும்பிப் பார்க்க வைத்தவர் தான் சரவணன் அருள்.
பொதுவாகவே பெரிய நடிகரை வைத்து விளம்பரம் செய்தால் அது நன்றாக இருக்குமே என பல பிரபலங்களை நாடி உள்ளனர். ஆனால் அதில் யாரும் பதிலை உறுதியாக சொல்லாமல் போனதால் தனது கடை விளம்பரத்துகளில் தானே நடிக்க வந்துள்ளார்.
தற்பொழுது லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகம் ஆகி நடித்துள்ள படம் “தி லெஜன்ட்” என்பதாகும்.
இப்படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரோட்டெல்லா, விவேக், பிரபு, விஜயகுமார், லதா விஜயகுமார், ரோபோ சங்கர் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தை பிரம்மாண்டமாக அவரே தயாரித்து இருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பலரது ஆதரவர்களை பெற்றது அதோடு பல ட்ரோல்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தது.
மேலும் இப்படம் கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது.
தற்போது திருமண விழாவில் பங்கேற்ற லெஜெண்ட் சரவணன் ஆள் அடையாளமே தெரியாமல் புது லுக்கில் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.