சுமார் 70 வருடமாக உள்ள நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன் இன் இந்தியா. இந்த நிறுவனத்தில் இருந்து நிறையப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு தேவைப்படும் பேபி சோப் பவுடர், பேபி ஆயில் , போன்றவை இந்த நிறுவனத்திலிருந்து விற்கப்படும் முக்கிய பொருளாக கருதப்படுகின்றன.
பிறந்த குழந்தைகளுக்கு கூட இந்தப் பவுடரை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நிலையில் அமெரிக்க நிறுவன ஜான்சன்அன்ட் ஜான்சன் நிறுவனம் ஜான்சன் பவுடர் விற்பனையை நிறுத்தி உள்ளது.
நிறுவன பொருட்களை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக அமெரிக்காவில் மட்டும் 1500 பேர் அந்நிறுவனத்தின் மேல் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை அடுத்து பல நூறு கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு உத்தரவு இருந்தது. இதனால் தற்போது இந்த பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்த கனடா மற்றும் அமெரிக்காஅறிவித்துள்ளது.










