தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்து பலருக்கும் எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனங்களில் பல படங்களை தயாரித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படங்கள் சமீபத்தில் வரவேற்பு பெறாததால் கடனுக்கு வட்டி கட்டி வருவதாக தகவல் வெளியானது.
மேலும் அவர் தயாரித்து வெளியான படங்கள் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. மேலும் டாக்டர் படத்தின் வெற்றி மூலம் ஓரளவு கடன்களை சமாளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சொந்த ஊரிலேயே பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.
அந்த வீட்டின் புதுமனை புகுவிழா விமர்சையாக நடைபெற்று உள்ளது. இந்நிலையில் பல கடன் பிரச்சனை என கூறி புலம்பும் சிவகார்த்திகேயன் எவ்வாறு இவ்வளவு பெரிய வீடு கட்டியுள்ளார் என கூறுகின்றனர். மேலும் சிலர் மிகக்குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்த சிவகார்த்திகேயனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.