ஜியாகோமோ டி’ஆன்ஜலிஸ் என்பவர் மெட்ராஸ் நகரில் உள்ள ஒரு இத்தாலிய ஹோட்டல் உரிமையாளர். அவர் உருவாக்கிய விமானத்தை மார்ச் 26, 1910 -ம் ஆண்டு சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியில் சோதனை செய்யப்பட்டது. அதுவே சென்னையின் முதல் விமானம் பறந்த நாள்.
அதன் பின் TATA AIRLINES அக்டோபர் 15, 1932 ஆம் ஆண்டு Puss Moth என்ற விமானத்தை கராச்சி வழியாக மும்பை வந்து அதன் பின் மெட்ராஸுக்கு வந்து இறங்கியது. இதுவே இந்தியாவின் முதல் அஞ்சல் விமான சேவை, இதன் மூலம் சென்னை சிவில் விமான சேவைகளின் தொடக்கமாக அமைந்தது.
சென்னைக்கு முதல் விமானத்தை வந்து இறக்கியது TATA AIRLINES ( AIR INDIA ) நிறுவனம் தான்.
1930 அந்த வருடகாலத்தில் பம்பாய் இருந்து திருவனந்தபுரம் வருவதற்கு 100 ரூபாயாம். பம்பாய் இருந்து டெல்லி வருவதற்கு 75 ரூபாய் மற்றும் பம்பாய் இருந்து சென்னை வருவதற்கு 80 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளார்கள்.