உத்தரபிரதேச மாநிலத்தில் திடவுரி என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்போது தான் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து மணப்பெண் அவரது வீட்டிற்கு அடியெடுத்து வைத்த நாளில் இருந்து மணமகன் வீட்டிற்கும் அந்த பெண்ணுக்கும் ஏதாவது சண்டை வந்து கொண்டே இருந்து உள்ளது.
ஒரு நாள் அந்த பெண்ணின் மாமனார் தனக்கு மிகவும் பசிப்பதாக தனது மருமகளிடம் கூறியுள்ளார். உடனே மருமகள் உணவை தயாரிக்க சமையல் அறைக்கு சென்று உள்ளார். உணவுக்காக காத்து கொண்டு இருந்த மாமனார் உணவு ரெடியாக தாமதம் ஆனதால் தனது மருமகளின் கழுத்தை நெரித்து கொன்று உள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போனார்கள்.
காவல்துறையினர் இறந்த அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணையை தொடங்கினர். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியது “என் மனைவிக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி ஏதாவது சிறு சண்டைகள் வந்து கொண்டு இருந்தது. வரதட்சனை சம்மந்தமாக எனது மனைவியிடம் என் தந்தை சண்டை போட்டு வந்தார். அது மட்டும் அல்லாமல் எனக்கு திருமணம் செய்ய வேறு ஒரு பெண்ணை என் தந்தை பார்த்ததாக கூறினார்”. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உணவு தயார் செய்ய தாமதம் ஆனதால் மருமகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.