கொரோனா பரவல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
உலகில் 110 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000 தண்டி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க :மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது பயில்வான் ரெங்கநாதன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!! கோபத்தில் ரசிகர்கள்.
பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணிவது தான் நல்லது என்று அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்துப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி முதல்வர் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் ஆர் சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் வருமா அல்லது வந்தால் எந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என்று அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்,