மீண்டும் மஞ்சப்பை பரப்புரை மற்றும் அது சார்ந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றாக துணிப் பைகளையும் உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.
தமிழ்நாடு அரசின் மீண்டும் நிகழ்ச்சி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று 23-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்க கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது. மாலை 7 மணி வரை நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு கழித்து அதனை தங்களுடைய வாழ்வில் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மானுடம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினைகளுள் சுற்றுச்சூழல் பிரச்சினை முதன்மையானது. மிகக் கேடு விளைவிக்கும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கத்தான் 'மஞ்சள் பை' முன்னெடுப்பைத் தொடங்குகிறோம். pic.twitter.com/1jCs4mj7hV
— M.K.Stalin (@mkstalin) December 23, 2021