Tuesday, August 18, 2026
-- Advertisement--

“யதார்த்த சினிமாவுக்கு உயிர் கொடுத்த படைப்பாளர் இனி இல்லை… தேசிய விருது பெற்ற இயக்குநர் செழியன் மறைவு!”

தேசிய விருது பெற்ற இயக்குநரும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 10) சென்னையில் காலமானார். சில காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் கல்லூரி திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான அவர், தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர், ரெட்டைச்சுழி உள்ளிட்ட பல முக்கிய படங்களில் தனது தனித்துவமான காட்சியமைப்பால் கவனம் பெற்றார்.

இயக்குநராக அவர் உருவாக்கிய டூ லெட் திரைப்படம் தேசிய திரைப்பட விருதைப் பெற்றதுடன், சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைப் பெற்றது. திரைப்பட மொழியில் யதார்த்தத்தை நுட்பமாக பதிவு செய்த படைப்பாளியாக செழியன் அறியப்பட்டார். ஒளிப்பதிவைத் தாண்டி, திரைப்படம் குறித்த எழுத்துகள் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கான பயிற்சி முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

செழியனின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles