சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தை பி வாசு அவர்கள் இயக்கினார்.
நகைச்சுவையாக திரைப்படத்தைக் கொண்டு சென்று போக போக விறு விறுப்பான கட்சிகளால் சீட்டின் நுனியில் அமர வைத்தார் பி. வாசு அந்த அளவிற்கு விறுவிறுப்பான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் சுவாரசியமான விஷயங்களை சேர்த்து சந்திரமுகி படத்தை வெளியிட்டு இருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு சந்திரமுகி படத்தில் தான் கிடைத்தது. அதுபோல படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா அனைவரையும் நடிப்பால் மிரட்டி இருந்தார்.
சந்திரமுகி படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஜோதிகா தான் நடிக்க உள்ளார் என்பதை அறிந்த ரஜினி ஐஸ்வர்யா ராய்யை சிபாரிசு செய்துள்ளார் ஜோதிகா எந்த அளவிற்கு நடிப்பார் என்று தெரியவில்லை என்றும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் ஜோதிகா புருவத்தை தூக்கி மிரட்டலான பார்வையில் வசனங்களை உச்சரித்த போது தான் ரஜினி நினைத்தாராம் ஜோதிகா தான் இந்தப் படத்திற்கு பர்ஃபெக்ட் சாய்ஸ் என்று.
அப்படிப்பட்ட மாபெரும் படத்தின் இரண்டாம் பாகத்தினை பி வாசு இயக்குகிறார். சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். நயன்தாரா, ஜோதிகா நடித்ததை போல இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 இன்று மைசூரில் ஷூட்டிங் தொடங்க இருப்பதால் தனது குருநாதர் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மைசூர் சென்று உள்ளார்.