Tuesday, August 18, 2026
-- Advertisement--

ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணைந்தார் செந்தில் பாலாஜி

ரூ.35 கோடி குதிரை பேரம் தொடர்பான வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்ற சூழ்நிலையை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் சட்டப்படி முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், தேவையற்ற கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் போது அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பின் வாதங்களை கேட்ட பிறகே நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்குமா அல்லது வேறு உத்தரவு பிறப்பிக்குமா என்பது தெரியவரும்.

இதற்கிடையில், ரூ.35 கோடி குதிரை பேரம் தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles