ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் ஒருவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்றாம் சீசனில் வெற்றியும் பெற்றார்.
அதன்பின் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது. நல்ல கதாபாத்திரம் இருந்தால்தான் சினிமாவில் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை தெளிவாக மனதில் வைத்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் நீதானா அவன் என்ற படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார். அதன்பின் சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா.
இயல்பாக நடிக்கக்கூடிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, தர்மதுரை போன்ற எதார்த்தமான கதையில் நடித்து வந்தார்.
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் அதனைத் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு கனா திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் WOMEN CENTRIC படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதுவரை அம்மணி ஹோம்லியாக நடித்தது போதும் கொஞ்சம் கிளாமர் காட்டினால் தான் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும் என்று நினைத்தாரோ என்னவோ தீவு ஒன்றில் குட்டை உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து அதனை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த பெண்ணா இப்படி போஸ் கொடுக்குது என்று ஆச்சரியப்படுகிறார்கள்.