கொரானோ வைரஸ் பெரும்பாலும் சிறு குழந்தைகளையும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும் தாக்குகிறதுஎன உலக நாடுகள் அனைத்தும் கூறுகின்றன. வெளிநாட்டில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும், இந்தியாவில் பெரும்பாலும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்களையும் தாக்குவதாக செய்திகள் வெளிவருகின்றன.
வயதானவர்களுக்கு பெரும்பாலும் நோய் எதிருப்பு சக்தி குறைவு, இதனால் இந்த நோய் சீக்கிரம் தாக்கும், இதனால் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்த்தி அதிகம் உள்ள உணவுகள், அதாவது வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் உங்களால் முடிந்த வேலைகளை செய்யுங்கள், அப்போது தான், தசை மற்றும் நரம்புகள் விரிந்து உடல் சீராகும், ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
தேவையின்றி வெளியே செல்லவேண்டாம், பெரும்பாலும் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது,
ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள், சூடான நீரையே பருகுங்கள், தியானம், உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை தினமும் செய்வது நல்லது.
மன தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம், வீட்டில் விழிப்போடு இருங்கள், கொரானாவை நீங்களும் வெல்லலாம்.