யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்று கொடுக்கும் டீச்சராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பின் சில படங்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்கின்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து.
பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது யாஷிகாவின் தாராளம் அந்த படத்திற்கு பெரிய ப்ளஸ் ஆக இருந்தது. அருவருப்பான வசனங்கள் ஓவர் கிளாமர் காட்சிகள் என்று இருந்தாலும் இளசுகள் திரையரங்கை நோக்கி படை எடுத்தனர்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பெரிய பிரபலத்தை அடைந்தார்.
யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிய சூட்டிங் செல்வது, கடை திறப்பு விழாவிற்கு செல்வது என்று பிசியாக இருந்து வந்தார் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் காரில் அதிவேகமாக பயணம் செய்த யாஷிகா மகாபலிபுரம் அருகில் இரவு நேரத்தில் கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே தனது தோழி பவானி என்பவரை பறிகொடுத்தார்.
கார் விபத்தில் யாஷிகா படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அதன்பின் ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து யாஷிகா சற்று தேறி வந்தார். அடிக்கடி ஏதாவது கிளுகிளுப்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக் அள்ளும் யாஷிகா விபத்துக்குப் பின் வாழ்க்கையை பற்றியும் மறைந்த தனது தோழி பவானி பற்றியும் இன்ஸ்ட்டாவில் தொடர்ந்து பதிவிட்டு இருந்தார்.
கண்டபடி புகைப்படங்கள் வெளியிடாமல் ஒரு பக்கம் யாஷிகா இருந்து வர அவரது தங்கை மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
என்ன நினைத்தாரோ என்னமோ யாஷிகா சிவப்பு நிற உடையில் மீண்டும் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க இன்னும் மாறலையா யாஷிகா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.