தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய நடிகைகளில் முன்னிலையில் உள்ளார். இவர் முன்பு கொழுகொழுவென இருந்தார், தற்போது பாலிவுட் நடிகைகள் போல உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். இவரது தற்போதைய தோற்றத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்குன்றன.
பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு இவருக்கு தேசிய விருது வழங்க பட்டத்தை அடுத்து தற்போது இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு பிரபல தொழில் அதிபருடன் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. இது குறித்த செய்திகள் மிகவும் வைரலானது. இந்த செய்திக்கு கீர்த்தியும் ஆமாம் என்று சொன்னதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பார்ட்னர் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த ஊரடங்கு உத்தரவின் போது இவர் தான் எனக்கு பார்ட்னர் என கூறி தன் செல்ல பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.