தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நிறைய படங்களில் தற்போது நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர். இவர்சந்தானம் போல காமெடியில் கலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவர் ஹீரோவாக வலம் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் போன்ற புகழை தற்போது பெற்று வருகிறார்.

இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளை கொண்ட பூங்காவாக திகழ்வது சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் நிறைய விலங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வெள்ளை புலி.

சமூகத் தொண்டிலும் ஆர்வமுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018 ஆம் ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆறு வெள்ளைப்புலி களில் ஒரு வெள்ளை புலியை தத்தெடுத்தார்.

இந்த புலியை மேலும் நான்கு மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். மேலும்வன விலங்குகளை பாதுகாப்பது மனிதனின் கடமை என்பதை உணர்ந்து சிவகாத்திகேயன் இந்த செயலை செய்துள்ளார்










