வெளிநாட்டில் இருந்து வரும் நிறைய மக்களுக்கு இந்தியாவில் கொரானோ தொற்று இருப்பது உறுதியாகி வருகிறது. இந்நிலையில் இவர்களையும் இவர்கள் சம்மந்தப்பட்டவர்களையும் தனிமையில் இருக்க சொல்லி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பிய பிரபல இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தன் வீட்டிலேயே தனி அறையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரானோ தொற்று இல்லை எனினும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதை அவர் செய்துள்ளார் என அவரது அம்மா சுஹாசினி மணிரத்தினம் இதனை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த காரியத்தை பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் தற்போது தனது பேரன் தனிமைப்படுத்தப்பட்டதை குறித்து சுஹாசினியின் தந்தை சாருஹாசன், ” என் பேரன் நந்தன் லண்டனில் இருந்து வந்த உடன் தாத்தா என்று என்னை தான் முதலில் பார்க்க வருவான். இப்போது இங்கு வந்து 10 நாட்கள் ஆகியும் என்னால் அவனை பார்க்க முடியவில்லை. “
இது மிகுந்த வருத்தத்தை எனக்கு கொடுத்தாலும் கொரானவை விரட்டி அடிக்க வேண்டிய நேரத்தில் இப்படி இருப்பது தான் சரி என கூறியுள்ளார்.