தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்திய மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் அவர்கள் எவ்வாறு பொழுதை கழிக்கின்றனர் என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சூரி தன் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். நடிகர் பிரகாஷ் ராஜும் அப்படி தான் செலவிடுகிறார். நடிகைகள் பலரும் சமைப்பது, உடல் பயிற்சி செய்வது என செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பரத், நடிகர் ஜீவா நடித்த ராம் படத்தில் வரும் அம்மா பாச பாடலான ஆராரிராரோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலை கேட்ட பலரும், என்ன குரல் உங்களுக்கு, இப்படி ஒரு திறமை உங்களுக்கு உள்ளதா என கேட்டு கருது தெரிவித்து வருகின்றனர்.










