Saturday, April 20, 2024
-- Advertisement--

விபத்தில் பெற்றோரை இழந்த 10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை…!!! ரயில்வே துறையினர் செய்த மாபெரும் உதவி..!!! நெகிழ்ச்சி சம்பவம்..!!!

பத்து மாத பெண் குழந்தைக்கு ரயில்வேயில் வேலை நிகழ்ச்சி நெகிழ்ச்சி சம்பவம் இதோ.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூன் ஒன்றாம் தேதி ராஜேந்திர குமார் யாதவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் ஆனால் அவர்களுடைய பத்து மாத பெண் குழந்தை ராதிகா மட்டும் அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் தப்பியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை தனது தாய் தந்தையை தேடி அழ ஆரம்பித்தது. அம்மா அப்பா இருவருமே சாலை விபத்தில் இறந்து விட்டதால் அந்த பத்து மாத குழந்தையை அவரது தாத்தா வளர்த்து வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த ராஜேந்திர குமார் அவர்கள் ரயில்வேயில் PP யார்டில் வேலை செய்திருக்கிறார். ரயில்வே ஊழியர் விபத்தில் இறந்த செய்தி கேட்ட ரயில்வே துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் உயிரிழந்த ரயில்வே ஊழியர் குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கருணை அடிப்படையில் அந்த பத்து மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை வழங்கியுள்ளார்கள்.

10 மாத பெண் குழந்தை ராதிகா 18 வயது நிரம்பிய உடன் ரயில்வே வேலையில் சேர்ந்து பணியாற்றலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ப்பூர் ரயில்வே மண்டலம் அந்த குழந்தைக்கு வேலை வழங்க முடிவு செய்ததுடன் அந்த குழந்தையின் கைவிரல் முறைப்படி பதிவு செய்து கொண்டது.

18 வயது நிறைவடையும்போது அந்த குழந்தை ராதிகாவிற்கு ரயில்வேயில் வேலை கிடைக்கும்.

விபத்தில் மரணம் அடைந்த ரயில்வே ஊழியரின் 10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை கொடுத்த சம்பவம் பலரையும் நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : எனக்கு ரகசிய மனைவியாக இரு மாதம் 25 லட்சம் தருகிறேன் பிரபல நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர்..!!!
இதையும் படிங்க : பிரபல நடிகையுடன் DATING சென்ற 56 வயது முன்னாள் IPL தலைவர்…!!!தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles